சுதந்திர இந்தியாவில் தேச துரோக வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான்: வைகோ

இந்தியா சுதந்திரம் பெற்ற உடன், தேச துரோக வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றார் என்றால் அது நான்தான் என வைகோ பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சர் பதவி, 2 முறை தேடி வந்தும் அதை மறுத்தவன் நான் என்றும், என் குடும்பத்தில் இருந்து யாரும், பதவிகளுக்கு வர மாட்டார்கள் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால்தான், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும், என் தொண்டர்கள் மட்டுமே எனக்கு உயிர், எனக்கு பிடித்த இடம் தாயகம் என்றும் வைகோ தனது பேட்டியில் மேலும் தெரிவித்தார்

வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என கூறிய வைகோ, 26 ஆண்டுகளாக கட்சியில், எந்த முடிவையும் தனித்து எடுத்ததில்லை என்றும், பதவி பெற்றவர்கள்தான் மதிமுகாவை விட்டு சென்றார்கள், லட்சியத்திற்காக யாரும் கட்சியைவிட்டு வெளியேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply