2021 ஜனவரி 27-ல் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை என பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு நரசிம்மமூர்த்தி ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை என பதில் அளித்துள்ளது.
சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை எனவும் ஆர்டிஐ மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும என்றும், அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும் என்றும் ஆர்டிஐ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.