சிம்பு ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான பொங்கல் செய்தி
சிம்பு ரசிகர்கள் இந்தப் பொங்கல் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஒரு அறிவிப்பு தற்போது சற்றுமுன் வெளியாகியுள்ளது
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? என்ற கேள்வி சிம்பு ரசிகர்களின் மனதில் எழுந்துள்ள நிலையில் இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது
இந்த படத்தின் படப்பிடிப்பு தேதி மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்
இதனையடுத்து ’மாநாடு’ படம் தொடங்குவது உறுதி செய்யப்பட்ட தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு தேதியையும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள இந்தப் பொங்கல் சிம்பு ரசிகர்களுக்கு சிறப்பான பொங்கல் என கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.