சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய தீட்சதர் தலைமறைவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை தாக்கியதாக தீட்சிதர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளதை அடுத்த அந்த தீட்சதர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் தீட்சதரிடம் அர்ச்சனை தட்டை கொடுத்து மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு தீட்சதர் ‘ஒரு தகாத வார்த்தை’யை கூறியதாகவும், அதன்பின் அந்த பெண்ணின் கன்னத்தில் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தீட்சதர் தர்ஷன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த அந்த தீட்சதரிடம் விசாரணை மேற்கொள்ள சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ளது தெரிந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள தீட்சிதர் தர்ஷனை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Reply