சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் இல்லை: ரஜினிகாந்த்

சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராடுவதால் எந்த பயனும் இல்லை என்றும் இதனை சொன்னால் என்னை பாஜகவின் ஆள் என்று சிலர் சொல்கிறார்கள் என்றும் அவ்வாறு சொல்ல வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துளார்.

சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்தவித பயனும் இல்லை என்றும் இந்த சட்டம் வாபஸ் வாங்க வாய்ப்பு இல்லை என்று தான் கருதுவதாகவும் கூறிய ரஜினிகாந்த், உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்விதான் டெல்லி வன்முறைக்கு காரணம் என்றும் மத்திய அரசு இந்த வன்முறையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் இன்று அளித்த பேட்டியில் அவர் கூறினார்

மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் டெல்லி வன்முறை மத்திய அரசுதான் கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் தனது பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply