சிஏஏ எதிர்ப்புப் பேரணி நிறைவு: அமைதியாக முடிந்ததால் போலீசார் நிம்மதி

சென்னையில் சட்டப்பேரவையை நோக்கி சிஏஏ எதிர்ப்பாளர்கள் பேரணி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பேரணியில் ஏதும் அசம்பாவிதம் நிகழாத வகையில் பாதுகாப்புக்காக போலீசார் பலப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை சட்டப்பேரவை நோக்கி சென்ற பேரணி நிறைவு பெற்றதாகவும் பேரணியில் பங்கேற்க வந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் 24 மணி நேரத்திற்குள் சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமைச் செயலகத்தை நெருங்காத வகையில் போலீசார் ஆயிரக்கணக்கில் இருந்ததால் இந்த பேரணியை முடிவுக்கு வந்ததாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்

Leave a Reply