அராஜகம் செய்கிறது திமுக: எச்.ராஜா

திமுகவினர் பாலவாக்கம் விஜிபி பிரதான சாலையில் நேற்றிலிருந்து 2 நாட்களாக அங்குள்ள சி வியூ குடியிருப்பில் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் கூட உள்ளே போகவோ வரவோ முடியாத அளவிற்கு அடைத்து திமுக மேடை போட்டு அடைத்துள்ளதாகவும், 150 கற்கும் மேற்பட்டோர் அங்கு மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதாகவும், இப்பவே அராஜகமா? என எச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பாலவாக்கம் விஜிபி பிரதான சாலையில் நேற்றிலிருந்து 2 நாட்களாக அங்குள்ள சி வியூ குடியிருப்பில் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் கூட உள்ளே போகவோ வரவோ முடியாத அளவிற்கு அடைத்து திமுக மேடை போட்டு அடைந்துள்ளனர். 150 கற்கும் மேற்பட்டோர் அங்கு மாஸ்க் அணியவில்லை சமூக இடைவெளி இல்லை இப்பவே அராஜகம்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஏற்கனவே திமுக குறித்து பல குற்றச்சாட்டுக்களை கூறி வருவதும் அதற்கு திமுக பதிலடி கொடுப்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது திமுக குறித்து அவர் மேலும் ஒரு கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த டுவீட்டுக்கு திமுக நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply