சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் !
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான ‘கேஜிஎப்’ படம் ரசிகர்களிடையே நல்ல வசூலை பெற்றது என்பது தெரிந்தாதே. மேலும் இந்த படத்தை பார்த்த தளபதி விஜய் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளதாக பிரபல எழுத்தாளர் சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் சுசித்ரா எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘தி ஹைவே மாஃபியா’ திரைப்படமாக எடுக்க இருக்கும் நிலையில் இந்த நாவலில் உள்ள தொழிலதிபர் அர்ஜூன் கிருஷ்ணன் வேடத்தில் நடிக்க தளபதி விஜய் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கவுள்ள படத்தை அடுத்து விஜய் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது
மேலும் சுசித்ரா இந்த நாவல் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத்தில் போன்ற மொழிகளில் படமாக்கப்பட்டால் அர்ஜூன் கிருஷ்ணன் வேடத்தில் மகேஷ்பாபு, சுஷாந்த்சிங் ராஜ்புத் மற்றும் யாஷ் போன்றவர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.