சபரிமலைக்கு செல்லும் பெண்கள் தீவிர பக்தைகளா? தீவிர விவாதிகளா? நடிகை கஸ்தூரி

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் நடிகை கஸ்தூரி தெளிவான ஒரு கருத்தை துணிச்சலாக தெரிவித்துள்ளார். ஆனால் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பெண்ணே பெண்களுக்கு எதிராக இவ்வாறு கருத்து கூறலாமா? என்று அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கஸ்தூரி கூறியதாவது: சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம் பிடிக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால்… தீவிர பக்தைகளா என்றால் அதுதான் இல்லை. தீவிர விவாதிகள் , பகுத்தறிவு வாதிகள், பெண் உரிமை பெரும் போராளிகள். சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை , பாவம் ஐயப்பன் தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்! என்று கூறியுள்ளார்.

அதேபோல் இந்து கோவில் குறித்து ஒரு அரசியல்வாதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து நடிகை கஸ்தூரி கூறியதாவது: குழந்தையின் கிறுக்கல்களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலைநயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை, கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்ட் நாத்திக சீன அதிபருக்கு கூட ரசிக்க தெரிந்தது, இங்கு வன்மம் புடிச்ச சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை. புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு? சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்- அது அவரின் பிறப்பினால அல்ல, அவரின் பிறவிக்குணத்தால்

கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply