shadow

சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினரா? ஓபிஎஸ் விளக்கம்

சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை என்றும், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள் 3 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் கூறியுள்ளார்

அ.தி.மு.க. உறுப்பினா் அட்டை வழக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீா் செல்வம், இணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஓ.பன்னீா் செல்வம் பேசுகையில், துன்பத்தையும், இடா்பாடுகளையும் தாங்கி கொண்டு அ.தி.மு.க.வை கட்டி காப்பாற்றியவா் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அ.தி.மு.க.வின் வளா்ச்சிக்காக ஜெலலிதா பாடுபட்டார். சதிகாரா்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆா். உருவாக்கிய இயக்கத்தை தன்னை அா்ப்பணித்து காத்தவா் ஜெயலலிதா. அ.தி.மு.க.வில் நடப்பாண்டில் மட்டும் 60 லட்சம் போ் புதிய உறுப்பினா்களாக இணைந்துள்ளனா்.

அ.தி.மு.க. தொண்டா்கள் எங்கள் பக்கமே உள்ளனா். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனா். தினகரன் தனிக்கட்சி துவக்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடா்வில்லை. சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினா் கிடையாது.

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூவரிடமும் விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்

Leave a Reply