கோத்தபய வெற்றி எதிரொலி: பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் அந்நாட்டின் எட்டாவது புதிய அதிபராக விரைவில் பதவி ஏற்க உள்ளார்
இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
மேலும் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை சந்திப்பது குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து அக்காட்சியின் விக்கிரமசிங்கே தலைமையில் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.