தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்று நாடு முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது

குறிப்பாக தமிழகத்தில் நேற்று இரவே ஆயுதபூஜை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

பழங்கள் உள்பட பல பொருள்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வீடுகளில் ஆயுதபூஜை கொண்டாட தயாராகினர்

தமிழகம் முழுவதும் கடைகள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் என்று உற்சாகமாக ஆயுதபூஜை பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்

ஆறு மாதம் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த மக்களுக்கு கிடைத்த முதல் பண்டிகையாக ஆயுதபூஜை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply