கொரனாவுக்கு மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவர்?

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரானா வைரஸ் தலைவிரித்து ஆடி வரும் நிலையில் அந்த வைரஸ் தாக்குதலால் சுமார் 300 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த வைரஸ் தாக்குதலால் 57 பேர் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது

இந்த நிலையில் கொரானா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் உள்ளனர். இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவர் கொரானா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இதனை நோயாளிகளுக்குக் கொடுத்து குணமாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

லோபினாவிர், ரிட்டோனாவிர் ஆகிய இரண்டு மருந்துகளின் கலவையை அந்த மருத்துவர் கொரனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறார் என்பதும் அந்த நோயாளிகள் அடுத்த நாளே குணமாகிய அதிசயமும் தெரிந்துள்ளடு. இருப்பினும் இந்த மருந்தை உலக சுகாதார நிறுவனம் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து தான் என்பதை ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply