கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடந்த சில நாட்களாக தொலைக்காட்சியில் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனித்தனி கட்டணம் என்ற புதிய முறை ஏற்பட்டுள்ளது. இது தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு கூடுதல் கட்டண சுமையாக உள்ளது.
இந்த நிலையில் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனித்தனி கட்டணம் என்பதை எதிர்த்து, சென்னை மெட்ரோ கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு மற்றும் டிராய் ஆகியவை வரும் ஜனவரி 3ஆம் தேதி பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.