shadow

குவைத் மன்னருக்கு பதிலாக சவுதி மன்னருக்கு நன்றி தெரிவித்த தமிழிசை

சமீபத்தில் குவைத் நாட்டில் வாழும் 15 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர்களின் கோரிக்கையை ஏற்று மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக அந்நாட்டு மன்னர் குறைத்தார்.

இந்த தகவலை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த டுவீட்டுக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், 15 இந்தியர்களின் மரண தண்டனையை ரத்து செய்த சவுதி மன்னருக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.

குவைத் மன்னருக்கு தெரிவிக்க வேண்டிய நன்றியை சவுதி மன்னருக்கு தமிழிசை தெரிவித்திருந்ததை பல டுவிட்டர் பயனாளிகள் சுட்டிக்காட்டியும் 15 மணி நேரத்திற்கும் மேலாக தவறு திருத்தப்படாமல் இருந்தது

Leave a Reply