குடியுரிமை திருத்த சட்டம்: திமுக திடீர் பல்டியா?
மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக திடீரென பல்டி அடித்துள்ளதாக கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் சிஏஏவுக்கு எதிராக நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. திமுக மட்டுமின்றி சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது
ஏற்கனவே இந்த சட்டம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.