கிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து நீதிமன்றம் வாபஸ்


கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றது என்ற கருத்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நல்ல கல்வியை வழங்கினாலும், அறநெறியை போதிப்பது என்பது, ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக உள்ளது இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த வழக்கிற்கும் இந்த கருத்திற்கும் தொடர்பு இல்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டதை அடுத்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply