கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பிய வங்கியால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த 25 வயது மகேஷ் குமார் என்பவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் தனியார் வங்கிகளில் 5 லட்சம் வரை கிரெடிட் கார்டு கடன் பெற்றதாக தெரிகிறது

கடந்த 5 மாதங்களாக நிறுவனத்திலிருந்து சம்பளம் வராததால் இவரால் கிரெடிட் கார்டு கடனை கட்ட முடியவில்லை

இந்த நிலையில் கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை உடனடியாகச் செலுத்துமாறு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ்குமார் தன் தந்தையிடம் பணத்தை ஏற்பாடு செய்யுமாறு கூறினார்

இந்த நிலையில் அவர் நாள் முழுவதும் மன உளைச்சல் இருந்ததாக தெரிகிறது இதனை அடுத்து திடீரென மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply