ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி அணி இந்த தொடரில் நன்றாக விளையாடி வருகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காயம் காரணமாக அமித் மிஸ்ரா டெல்லி அணியில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே

தற்போது அதே அணியில் மீண்டும் ஒரு முக்கிய வீரர் விளக்கியுள்ளார். டெல்லி அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான இசாந்த் சர்மா ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது

எனவே டெல்லி அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் விலகியுள்ளதால் அடுத்து வரும் போட்டிகளில் எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply