காதலன் கண்முனே பலியான காதலி: சேலத்தில் காதலர் தின சோகம்
சேலத்தில் காதலர் தினம் கொண்டாடிய காதல் ஜோடி ஒன்றின் காதலன் கண்முனே காதலி பலியான சோக நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகர் அஸ்தம்பட்டி கேகே நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் அசோக் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காதலர் தினமும் ஆர்த்தியின் பிறந்த நாளும் ஒரே நாளாக இருந்ததை அடுத்து காதலனுடன் பிறந்த நாளை கொண்டாட காதலன் அசோக் உடன் ஆர்த்தி, மோட்டார் பைக்கில் சென்றார்.
அப்போது ஆர்த்தியும் பைக் ஓட்ட ஆசைப்பட்டதால் அவரும் பைக் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. ஆர்த்தி பைக் ஓட்டியபோது தீவட்டிப்பட்டி காவல் நிலையம் எதிரே திடீரென அவர் ஓட்டிச்சென்ற பைக், மற்றொரு பைக் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ஆர்த்தி, பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலர் அசோக் கண்முனே பரிதாபமாக ஆர்த்தி பலியானது அவரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.