சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்ததாக கூறப்பட்ட வனிதாவின் செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளி வந்தன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் கரன்சி மாலையுடன் பீட்டர் பாலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

வனிதாவின் வீட்டில் சமீபத்தில் குபேரன் பூஜை நடந்ததாகவும் இந்த பூஜைக்காக வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகிய இருவரும் கரன்சி மாலையைப் போட்டுக் கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது

மேலும் 2020 ஆம் ஆண்டில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்புவது என்பது ஒரு அதிசயம்தான் என்றும், கடவுளால் மட்டுமே அதை செய்ய முடியும் என்றால் அது போல் பீட்டர் பால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் தனது நிம்மதியை அளித்துள்ளதாகவும் வனிதா கூறியுள்ளார்

வனிதா, பீட்டர் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது தனது கணவரை மீட்டு தந்தமைக்காகாகவும், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி வருமானம் அதிகரிக்கவும் இந்த பூஜையை நடத்தியதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்

//www.instagram.com/p/CE8wepHDuOO/

Leave a Reply