அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி
கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களின் முழு முதற் கடவுளான முருகப்பெருமானிடம் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பாலதேவராய சுவாமிகளால் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்திப் பாடலாகும். இப்பாடலில் உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து கவசமாக காக்கப்பட வேண்டுமென முருகப்பெருமானிடம் மனமுருகி முருகனடியார்கள் பாடி இறையருள் பெறுகின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி தவறாக அர்த்தம் கற்ப்பிக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கதக்கதாகும். இவ்வாறு அவதூறாக விமர்சனம் செய்த, கருப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.