shadow

கருணாநிதி மீது தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்: சீமான்

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் தனிப்பட்ட முறையில் மிக அதிகமாக தாக்கி பேசியவர் சீமான் என்பதே அனைவருடைய கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கருணாநிதி மீதான தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம் என சீமான் தனது கட்சியினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் அதனை தவறாக பேசியும், விமர்சனப் பதிவுகள் இட்டு பகிர்வதும் மிக தவறான போக்கு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறையான செய்திகளை நாம் தமிழர் கட்சியினரின் பெயரில் இயங்கும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள் என்ற செய்தியறிந்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கருணாநிதியின் அரசியல் முடிவோடும், திமுகவின் கொள்கை கோட்பாடுகளோடும் மாற்றுக் கருத்து உண்டு என்பதில் ஐயமில்லை என தெரிவித்துள்ள சீமான், ஆனால் அவரது உடல்நிலை நலிவுற்ற இந்த நேரத்தில் அதுகுறித்து விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். இது அறமோ, அரசியல் பண்பாடோ அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply