கத்துவா சிறுமி பாலியல் விவகாரம்: ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் ராஜினாமா
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா என்ற பகுதியில் ஆசிபா என்ற சிறுமி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
கத்துவா சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
நிர்மல் சிங்கிற்குப் பின் புதிய துணை முதல்வராக கவீந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.