சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் நேற்று இரவு அறிவித்திருந்தது

இதன்படி இன்று அதிகாலை போரூர், மதுரவாயல், ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்ஆர்சி நகர் பகுதிகளிலும் வளசரவாக்கம், ராமபுரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை என தகவல்

மேலும் முகப்பேர், அண்ணாநகர், செங்குன்றம், புழல் பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

வேளச்சேரி, தரமணி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை

மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளதாகவும், புரேவியால்தான் சென்னையில் கனமழை பெய்ததாகவும் தகவல்

Leave a Reply