கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியேற்றினால்.. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனியார் பள்ளியொன்றில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட மாணவன், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று கே.ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார். இருப்பினும் அமைச்சரின் இந்த எச்சரிக்கை தனியார் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply