கடும் வெயில்: ராஜபாளையத்தில் சுருண்டு விழுந்து ஒருவர் பலி

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் காரணமாக கடுமையான வெயில் அடித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் ஒருசில உயிரிழப்புகளும் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இன்று ராஜபாளையத்தில் வெயில் தாங்காமல் ஒருவர் சுருண்டு விழுந்து பலியானார். ராஜபாளையத்தில் உள்ள காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் இன்று திடீரென வெயிலின் வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார்.

Leave a Reply