கடனுக்கு சிக்கன் தராததால் கொரோனா வதந்தி பரப்பியவர் கைது
நெய்வேலியில் சிக்கன் கடை ஒன்றில் சிக்கன் வாங்க வந்த ஒருவர் சிக்கன் வாங்கி வீட்டு கடன் கேட்டதாகவும் ஆனால் கடனுக்கு சிக்கன் தர முடியாது என்று சிக்கன் கடைக்காரர் கூறியதாகவும் தெரிகிறது
இதனையடுத்து அந்த நபரிடம் வாங்க வந்த வாலிபர் அந்த கடையில் வாங்கும் சிக்கனில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என வதந்தியை வாட்ஸ்அப் குரூப்பில் பரப்பியதாக தெரிகிறது
இதனால் நெய்வேலியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது வதந்தியை பரப்பியவர் மீது சிக்கன் கடைக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.