shadow

கஜா புயல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த திமுக

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய கூட்டம் தொடங்கிய வுடன் கஜா புயல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்தது

திமுகவின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றைய கேள்வி நேரம் முடிந்தவுடன் நடைபெற உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தின்போது விவாதிக்க அனைத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தின் டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் கஜா புயலால் சீரழிந்த நிலையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் அந்த பகுதி மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Leave a Reply