ஓடும் காரில் கல்லூரி மாணவர்-மாணவி பாலுறவு: விபத்தில் சிக்கியதால் கைது!
மலேசியாவில் 25 வயது கல்லூரி மாணவர் ஒருவரும், 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் ஓடும் காரில் பாலியல் உறவு கொண்டதாக தெரிகிறது.
அந்த கார் வழக்கத்தை விட அதிக வேகத்தில் சென்றதால் போலீசார் அந்த காரை மடக்க முயன்றனர். போலீஸ் தங்களது காரை துரத்துவதை அறிந்ததும் இன்னும் வேகமாக கல்லூரி மாணவர்கள் சென்ற கார் சென்றதால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் கல்லூரி மாணவர், மாணவிக்கு எந்த காயமும் இல்லை என்றாலும் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு கால் எலும்பு முறிந்தது. இதனையடுத்து காரை வேகமாக ஓட்டியது, ஓடும் காரில் பாலுறவில் ஈடுபட்டது. விபத்து ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.