இதுதான் தனிமைப்படுத்துதலா?

வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புபவர்கள் கட்டாயம் ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்து திரும்பும் இந்தியர்கள் தனியார் ஓட்டல்களில் சொந்த பணத்தில் அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் செலவில் தங்கி வருகின்றனர்

இந்த நிலையில் ஒரு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் துபாயில் இருந்து இந்தியா வந்த சுமார் 200 ஊழியர்கள் தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப் பட்டதாகவும் ஆனாலும் ஒரே படுக்கையில் இருவர் தங்க வைக்கப் பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது

கணவன் மனைவியாக இருந்தால் மட்டுமே ஒரே அறையில் இருவர் தங்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆனால் சம்பந்தமில்லாத இருவரை ஒரே அறையில் அதுவும் ஒரே படுக்கையில் இருவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொடுத்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா பரவலைத் தடுக்கவே தனிமைப்படுத்துதல் என்றிருக்கும் நிலையில் இந்த தனிமைப்படுத்தலே கொரோனா பரவுவதற்கும் காரணமாகிவிடும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply