ஒரே நாளில் பிகில், கைதி ரிலீஸ்? யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விஜய்யின் பிகில் அக்டோபர் 25ஆம் தேதியும் கார்த்தியின் கைதி அக்டோபர் 27-ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றது

விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த படம் குறைந்தபட்சம் ஒரு வாரம் போட்டியின்றி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடினால் மட்டுமே ரூ.200 கோடி வசூலை எடுக்க முடியும்.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி, ஞாயிறு அன்று வருவதாலும் திங்களன்றே ள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாலும் வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே விடுமுறை தினங்கள் ஆகும். இந்த மூன்று நாட்களில் கிடைக்கும் வசூலே பிரதானமாக இருக்கும். கைதி திரைப்படத்தை பொருத்தவரை ரூ.50 கோடிக்கும் குறைவான பட்ஜெட் என்பதால் மூன்று நாட்கள் வசூலில் இந்த படம் தப்பித்துவிடும். பிகில் தப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply