ஒரு வருடமாக பகவத் கீதை துணியை நெய்யும் நெசவாளர்
இந்துக்களின் புனித நூல் என்று கருதப்படும் பகவத்கீதை நூலை ஒரு நெசவாளர் தான் நெய்யும் துணியில் நெய்து வருகிறார்/
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஹேம்பிரபா என்ற நெசவாளர் திபுர்காஹ் என்ற பகுதியை சேர்ந்தவர். பகவத்கீதை மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தான் நெய்யும் துணியில் பகவத் கீதை முழுவதையும் பதிவு செய்ய முடிவு செய்தார்.
ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கடந்த டிசம்பர் மாதம் இந்த பணியை தொடங்கிய ஹேம்பிரபா, தற்போதும் அந்த பணியை தொடர்ந்து வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் பகவத் கீதை முழுவதையும் தான் நெய்யும் துணியில் கொண்டு வந்துவிடுவேன்’ என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இந்த செய்தியை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.