பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் மாலை அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இளையராஜா, பாரதிராஜா, ஏஆர் ரகுமான் உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகவும் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

சற்று முன் வெளியான தகவலின்படி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மயக்க நிலையிலிருந்து மீண்டதாகவும் அவ்வப்போது அவர் கண் விழித்து பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply