shadow

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

பிரபல தமிழ் எழுத்தாளரும் தமிழ் சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் இன்று புதுவையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73

இந்த நிலையில் பிரபஞ்சன் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், வானம் வசப்படும் என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருதினை பெற்ற பெருமைக்குரியவர் பிரபஞ்சன் என்றும், பிரபஞ்சனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் இரங்கல் என்றும் முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply