என் புத்தியை ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும்: படம் ஓடாத விரக்தியில் பார்த்திபன்
பார்த்திபன் நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு 7’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. ஒரு காட்சிக்கு 50 முத்ல் 100 பேர் மட்டுமே படம் பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் வெள்ளியன்று ‘நம்ம வீட்டு பிள்ளை’ உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளிவரவிருப்பதால் வரும் வியாழனுடன் இந்த படம் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் தூக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் ஒருசிலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் கொடுத்து வருகின்றனர். இதனையடுத்து மனம் வெறுத்து போன பார்த்திபன் தனது டுவிட்டரில், ‘# OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது’ பார்த்திபன் டுவீட் செய்துள்ளார்.
பார்த்திபனின் இந்த டுவீட் பெரும் சர்ச்சையாகியுள்ளது
# OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து
போடுவதும்,பார்ப்பதும்
அருவருப்பான செயல்!ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு!Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது pic.twitter.com/3FyiuS9fYp— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 24, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.