shadow

எனக்கும் பரோல் கொடுங்கள், வெளிநாட்டுக்கு தப்பமாட்டேன்: நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேரறிவாளனை போலவே எனக்கும் பரோல் கொடுங்கள் என நளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய பணி இருப்பதால் தனக்கு ஆறு மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என்றும், பரோலில் வந்தால் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல மாட்டேன் என்று தமிழக அரசின் பதில் மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி விளக்க மனு தாக்கல் செய்தார்

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply