உபியில் வரலாறு காணாத மூடுபனி: 10க்கும் மேற்பட்ட கார்கள் மோதியதால் பரபரப்பு
டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத பனி கொட்டி வருகிறது. காலை நேரத்தில் பல இடங்களில் மூடுபனி சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக மூடுபனி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் பங்கார்மாயூ என்ற பகுதி அருகில் கடுமையான மூடுபனி காரணமாக பாதை தெரியாததால் சுமார் 10க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.