உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு: நிர்பயா குற்றவாளிகள் வழக்கறிஞர் பேட்டி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22ஆம் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் பேட்டி அளித்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது, இந்த தீர்ப்பால் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி பேட்டி அளித்துள்ளார்.

மறுசீராய்வு மனு தாக்கலால் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தேதி தள்ளிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply