ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மெளனம் காப்பது கண்டிக்கத்தக்கது: தங்க தமிழ்ச்செல்வன்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சுமார் நான்கு மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து தினகரன் உள்பட அவரது ஆதரவாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் இந்த சோதனைகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல். தமிழக போலீஸாரின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது என்றால் இது அரசின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்குமா. இந்தச் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது மெளனம் கண்டிக்கத்தக்கதாக உள்ளது’ என்று கூறினார்
இந்த நிலையில் நேற்று ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்திருக்கும் நிலையில் இன்று எந்தவித டென்ஷனும் இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.