இளம்பெண்ணுக்காக நள்ளிரவு பூஜை நடத்திய சாமியார் வெடிகுண்டு வெடித்து மரணம்!

திருவள்ளூர் அருகே இளம் சாமியார் ஒருவர் நள்ளிரவில் இளம்பெண் ஒருவருடன் பூஜை செய்து கொண்டிருந்தபோது திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்து நடித்ததால் மரணமடைந்தார்

திருவள்ளூரை அடுத்த ஒரு பகுதியில் சாமியார் நந்தகோபால் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஜோதிடம் மற்றும் இயற்கை வைத்தியம் செய்து வருகிறார்

அவரிடம் சென்னையில் இருந்தும் மற்றும் திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் பூஜை செய்யவும் வைத்தியம் செய்யவும் வருவதுண்டு

அந்த வகையில் நேற்று நள்ளிரவு சென்னையிலிருந்து லாவண்யா என்ற பெண், சாமியார் நந்தகோபாலிடம் வந்து தனக்காக பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்

இந்த பூஜை நள்ளிரவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு மர்ம பொருள் ஒன்று வெடித்து சாமியார் நந்தகோபால் சம்பவ இடத்திலேயே உயிர் கருகி மரணம் அடைந்தார். ஆனால் லாவண்யா மட்டும் எந்தவித சிறு காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக லாவண்யாவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே அறையில் சாமியாரும் லாவண்யாவும் பூஜைகள் செய்து கொண்டிருந்தபோது சாமியார் மட்டும் மர்மப்பொருள் வெடித்ததால் உடல் கருகி இறந்தது எப்படி? என்பது குறித்தும், லாவண்யா சிறு காயம் கூட இல்லாமல் தப்பித்தது எப்படி? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இது குறித்து மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply