இலங்கையையும் புரட்டி போட்ட ஓகி புயல்
தமிழகத்தில் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த சேதங்களை உண்டாக்கிய ஓகி புயல், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையையும் விட்டு வைக்கவில்லை
இலங்கையில் ஓகி புயலால் மணிக்கு சுமார் 70கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், காற்றுடன் கனமழையும் பெய்ததால் அங்கும் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,
மேலும் இலங்கையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஐந்து பேர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணியில் இலங்கை கடலோர காவல்படை ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இலங்கையின் பல பகுதிகளில் மரங்கள் சாலையின் குறுக்கே வீழ்ந்துள்ளதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.