shadow

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் சர்வராக ரோபோ

ஜப்பான் மற்றும் மேலைநாடுகளில் உள்ள ரெஸ்டாரெண்டுகளில் ரோபோக்கள் சர்வராக செயல்படுவது குறித்து செய்திகளில் பார்த்துள்ளோம். இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை OMR சாலையில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் ரோபோக்கள் சர்வராக பணிபுரிகின்றன.

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் வெங்கடேஷ் மற்றும் கார்த்திக் இணைந்து நடத்தி வரும் MOMO என்ற ரெஸ்டாரெண்ட் OMR சாலையில் உள்ளது. வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ரெஸ்டாரெண்டில் தற்போது நான்கு ரோபோக்கள் சர்வராக பணிபுரிகின்றன.

வாடிக்கையாளர்களின் டேபிளில் டேப்ளட் இருக்கும். அதில் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்தால், உடனே அந்த ஆர்டர்கள் கிச்சனுக்கு செல்லும். ஆர்டர் செய்த உணவுகள் தயார் ஆனதும், ரோபோ எடுத்து வந்து பரிமாறும். மேலும் அந்த ரோபோ தமிழ் மொழியையும் புரிந்து கொள்ளும். இந்த புதிய முயற்சிக்கு சென்னைவாசிகள் நல்ல ஆதரவு கொடுத்து வருவதாக வெங்கடேஷ் மற்றும் கார்த்திக் கூறியுள்ளனர்.

Leave a Reply