இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சம் அடைந்துள்ளது. நேற்று
ஒரே நாளில் இந்தியாவில் 97,856 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 82,922 என்பதும் இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40,22,049
என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இந்தியாவில் ஒரேநாளில் மொத்தம் 1,140 பேர் கொரோனாவுக்கு பலி என்றும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 83,230 என்றும் தகவல் வெளிவந்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.