shadow

ஆர்.கே.நகர் தேர்தல் தேதியில் 2ஜி வழக்கின் தீர்ப்பு? தற்செயலா? மத்திய அரசின் சதியா?

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அதே தேதியில் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி சற்று முன்னர் அறிவித்துள்ளார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் அதே தேதியில் தீர்ப்பு வெளிவரவுள்ளதால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் இது தற்செயலா? அல்லது மத்திய அரசின் சதிகளில் இதுவும் ஒன்றா? என்று அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் 21ஆம் தேதி காலை 10.,30 மணிக்கு 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிராக எதிராக தீர்ப்பு வந்தால் ஆர்.கே.நகரில் திமுகவின் வாக்குகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply