ஆர்யா-சாயிஷா திருமணம் குறித்த உறுதி செய்யப்பட்ட டுவீட்
நடிகர் ஆர்யாவின் திருமணம் குறித்த செய்திகள் ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துவிட்டதூ. ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் காதல் என்றும் இந்த காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து வரும் மார்ச் மாதம் திருமணம் என்றும் செய்திகள் வெளியானது
இருப்பினும் இந்த செய்தியை ஆர்யா, சாயிஷா ஆகிய இருவருமே தங்கள் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்யாததால் ஒருசிலர் இதனை நம்பவில்லை
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, ஆர்யா தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆசியுடன், தனக்கும் சாயிஷாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாக அவர் அந்த டுவீட்டில் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.