ஆகஸ்ட் 15 முதல் கோக், பெப்சி விற்பனை நிறுத்தம்: வணிகர் சங்கம் அறிவிப்பு
வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் முதல் தமிழகத்தில் அன்னிய பொருட்களான கோக், பெப்சி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். சற்றுமுன் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன் இதனை தெரிவித்துள்ளார்.
கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்களுக்கு பதில் உள்ளூர் பானங்கள், பதநீர், இளநீர், போன்றவை விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. வெள்ளையன் அவர்களின் இந்த அறிவிப்புக்கு சமூக நல ஆர்வலர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.