shadow

அலட்சியம் அவசரம்: டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளானதால் அதிர்ச்சி

டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திரமோடி வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் திறந்து வைக்கவுள்ளதாக திட்டமிட்டிருந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் நேற்றைய இறுதிக்கட்ட சோதனையின்போது விபத்துக்குள்ளானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில், கால்காஜி மந்திர்-பொட்டானிக்கல் கார்டன் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரைலர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மெட்ரோ உயரதிகாரிகள் இந்த ரயிலை முழுமையாக சோதனை செய்த பின்னர் சோதனை ஓட்டத்திற்கு அனுமதியளித்தனர். ஆனால் முதல்கட்ட சோதனையிலேயே இந்த ரயில் பக்கவாட்டு சுவரின் மேல் மோதியதோடு சுவரை உடைத்து கொண்டு அந்தரத்தில் நின்றது. இதனால் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சோதனையே வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply