‘அருந்ததி 2’ படத்தில் நடிக்க ரூ.5 கோடி கேட்டாரா அனுஷ்கா?

தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய ‘அருந்ததி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அதனையடுத்து வேறு நடிகையை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலகில் ஒரு வதந்தி பரவி வருகிறது

அருந்ததி 2′ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அனுஷ்காவே மீண்டும் நடித்தால்தான் படம் நன்றாக இருக்கும் என கருதி அவரிடம் படக்குழுவினர் அணுகினர். இந்த படத்திற்காக பாகுபலி படத்திற்கு கொடுத்தது போல் அதிக நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று படக்குழுவினர் கேட்டதாக தெரிகிறது

இதனையடுத்து அனுஷ்கா ரூ.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் தற்போது பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்திடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘ஏஞ்சல்’ படத்திலும் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply