அண்ணா பல்கலை
தமிழக அரசு அறிவித்தபடி அரியர் எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் அவர்கள் அனைவரும் பாஸ் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்
இதனை அடுத்து மாணவர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்தபடி அரியர் எழுதுவதற்காக கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் பாஸ் என்றும் அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.